நெல்லை மாவட்டம் முக்கூடல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. பகலில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், மாலை நேரத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. பலத்த காற்று வீசியதால் மின் வயர்கள் அறுந்து விழுந்ததால் சுமார் 3 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.