திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழையின்போது இடி தாக்கியதில் தென்னை மரம் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மலையாண்டி கவுண்டனூர் பகுதியில் தென்னை மரத்தில் இடி விழுந்ததில், மரம் தீப்பற்றி எரிந்தது. கிழவன்காட்டூர் கிராமத்தில் மின்கம்பம் சாய்ந்ததால் மின்தடை ஏற்பட்டது. மேலும், மரம் முறிந்து விழுந்ததால் உடுமலை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.