புதுச்சேரியில் இரவு நேரத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இரவு வெளுத்து வாங்கிய கனமழையால் புதுச்சேரி முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவியது.