கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் திடீரென வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக சாலைகளில் கழிவுநீருடன் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். அரை மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரில் கழிவுநீர் கலந்து கருமை நிறத்தில் காட்சியளித்தால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.