விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் பெயர் பலகைகள் உள்ளிட்டவைகள் சேதமடைந்தது. அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதனால் மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையோரத்தில் உள்ள கடைகளில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகைகள், மின்ஒயர்கள் உள்ளிட்டவைகள் காற்றில் கீழே விழுந்து சேதமடைந்தது