திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் மின் கம்பங்கள் சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஊத்துக்கோட்டை, பாலவாக்கம், தண்டலம், பெரியபாளையம், ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறை காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் அரிபாக்கம் பகுதியில் மின்கம்பம் கீழே சாய்ந்ததில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் அங்குள்ள வீட்டின் மீது புளியமரம் விழுந்த நிலையில் வீட்டிலிருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.