சென்னை ராயபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மகப்பேறு மருத்துவமனையில் அபாயகரமாக காணப்படும் பள்ளத்தில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசும் நிலையில், அதில் புழுக்களும் நெளிவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குழந்தை பிறப்பு விகிதத்தில் முதலிடத்தில் உள்ள இம்மருத்துவமனையில் பிரசவத்திற்கு வரும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவில்லை என்றும், சில சமயங்களில் படுக்கைகள் பற்றாக்குறையால் குழந்தை பெற்ற பெண்கள் தரையில் படுக்கும் நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது. கட்டட சுவர்கள் காரை பெயர்ந்து காட்சியளிக்கும் நிலையில், குழந்தை பெற்ற பெண்களுடன் தங்குவோருக்கு, போதிய கழிப்பறை, குடிநீர் வசதி இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.