மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் வயிற்றை கிழித்த பின், கட்டி பெரிதாக உள்ளதால் அறுவை சிகிச்சை செய்ய முடியாது என கூறி மேல்சிகிச்சைக்கு அனுப்பி வைத்ததாக பாதிக்கப்பட்ட பெண் மக்கள் குறைதீர் கூட்டத்தில் புகார் தெரிவித்தார். தென்கரை பகுதியை சேர்ந்த தமிழரசியின் சிறுநீரகத்திற்கு அருகில் உள்ள கட்டியை அகற்ற வேண்டும் என்று கூறி மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது.