தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் கோயில் கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்துவதாக புகார் கூறி, சமூக வலைதள பிரபலம் ஜி.பி. முத்துவை ஊர் மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டால் பரபரப்பு ஏற்பட்டது. பெருமாள்புரத்தில் வசித்து வரும் ஜி.பி. முத்து, ஆக்கிரமிப்புகளால் அங்கிருந்த கீழத்தெருவை காணவில்லை என, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில், அவரது வீட்டிற்கு செல்லக்கூடிய பொதுப்பாதையை ஆக்கிரமித்து கோயில் கட்டுவதாகவும், இது தொடர்பாக புகார் அளித்ததால் தம் மீது ஊர் மக்கள் அவதூறு பரப்புவதாகவும், ஜி.பி. முத்து கூறியுள்ளார்.