தருமபுரி அருகே அரசுப் பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர், பயணிகள் மற்றும் கல்லூரி மாணவிகள் என 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தருமபுரியில் இருந்து நாகாவதி அணை நோக்கி சென்ற அரசுப் பேருந்தும், சின்னம்பள்ளியில் இருந்து வந்த பேருந்தும், நாகாவதி அணை அருகே வனசாலை பகுதியில் வளைவில் திரும்பும்போது மோதின. இதில் பலத்த காயமடைந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.