கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே அரசு பேருந்தும் மினி லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஓட்டுநர்கள் இருவர் உயிரிழந்த நிலையில், 38 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போச்சம்பள்ளி வழியாக அரசு பேருந்து திருப்பத்தூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்த நிலையில், எதிர்திசையில் எம்.சாண்ட் ஏற்றி வந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. இதில் லாரி மற்றும் பேருந்தின் முன்பகுதிகள் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில், விபத்து காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.