காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நடைபெற்ற தங்கத்தேர் உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். சித்திரை 2-ஆவது வார வெள்ளிக்கிழமையை ஒட்டி, காஞ்சி காமாட்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, பஞ்சவர்ண பட்டுடுத்தி, மலர் மாலைகள், ஆபரணங்கள் அணிவித்து, லட்சுமி, சரஸ்வதி தேவிகளுடன் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தங்கத்தேரில் எழுந்தருளினார்.