சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கோவில் நேர்த்திக்கடனுக்காக 35 அடி உயரத்தில் ஒரு டன் எடையில் ராட்சத அரிவாள் தயாரிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் வசிக்கும் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த பக்தர் ஒருவர் தனது குல தெய்வ கோவிலுக்காக அரிவாள் செய்ய ஆர்டர் கொடுத்த நிலையில் கைப்பிடி மட்டும் 10 அடி உயரத்திற்கு தயார் செய்யப்பட்டுள்ளது.