செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்குவதற்காக கடலில் பயன்படுத்தப்படும் ராட்சத குழாய்கள் கரை ஒதுங்கிய நிலையில், அதனை கடலுக்குள் கொண்டு செல்லும் பணி மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. கடல் சீற்றம் காரணமாக சுமார் ஆயிரத்து 500 மீட்டர் நீளமுள்ள ராட்சத குழாய்கள் திடீரென கரை ஒதுங்கின.