திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே அரசு துணை சுகாதார நிலையத்தில் சுவரை உடைத்து கேட்டை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். கீக்களூர் கிராமத்தில் உள்ள அரசு துணை சுகாதார நிலையத்தில் இரவு மர்ம நபர்கள் கைவரிசை காட்டிய நிலையில், மருத்துவமனை தரப்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.