கரூரில் இரிடியம் இருப்பதாக கூறி ஒரு கும்பலை கடத்திய 6 பேர் உட்பட 12 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து செல்போன், வாகனங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இரிடியம் இருப்பதாக மதுரை சேர்ந்த சிவகுமார் கூறியதை நம்பி சென்ற 3 பேரை கடத்தி வைத்து கொண்டு 15 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டினர். இது தொடர்பாக அளித்த புகாரில் கடத்தலில் ஈடுபட்ட ரவிக்குமார்,சிவகுமார், குமார், முத்துப்பாண்டி, கண்ணன் மற்றும் கருப்பு சாமி ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பணத்தை வாங்கி கொண்டு ஏமாற்றிய வாசு, பொன்னரசன், பால்ராஜ், ஹரீஸ், சுரேஷ் மற்றும் ராஜ்குமார் ஆகிய 6 பேர் என மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.