பெண்களை இழிவாக பேசியதாக கூறி வனத்துறை அமைச்சர் பொன்முடியை கண்டித்து தருமபுரி தொலை தொடர்பு அலுவலகம் அருகே பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட பாஜக தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பொன்முடியின் உருவ படத்தில் துடைப்பம் மற்றும் செருப்பை கொண்டு அடித்து தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக கூறி போராட்டடத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.