நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பூங்காவில் முதல் முறையாக நடைபெற்று வரும் மலைப்பயிர்கள் கண்காட்சி, சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. நான்கு டன் எடையிலான பத்துவகை மலை பயிர்களை கொண்டு ஓலை குடிசை, ஓலை கட்டில், கன்றுக்குட்டி, சேவல் உள்ளிட்ட வடிவங்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. 3 நாட்கள் நடைபெறும் பயிர்கள் கண்காட்சியை ஏராளமான சுற்றுலாப்பயணிகள் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.