மதுரை வைகை ஆற்றில் இரண்டாவது முறையாக கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சித்திரை திருவிழாவிற்காக மதுரைக்கு வந்த கள்ளழகர் தங்கக்குதிரை வாகனத்தில் ஒரு முறையும், அனந்தராயர் பல்லக்கில் இரண்டாவது முறையும் வைகையாற்றில் இறங்கி அருள்பாலித்தார். இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு களித்து கோவிந்தா என பக்தி முழங்கமிட்டு அவரை தரிசனம் செய்து வழியனுப்பி வைத்தனர்.