அனைத்து சமுதாயத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி பின்பற்றப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், புதிய நீதிபதிகள் தேர்வில் பன்முகத்தன்மை கொண்ட வழக்கறிஞர்கள், சிறுபான்மை பிரிவு வழக்கறிஞர்கள் என அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் உரிய பிரிதிநிதித்துவம் வழங்கும் வகையில் சமூகநீதி பின்பற்றப்பட வேண்டும் என்ற சங்கத்தின் பொதுக்குழு தீர்மானத்தை பரிசீலிக்க வலிறுத்தப்பட்டுள்ளது.