திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் 50 ரூபாய் கட்டண தரிசன வழியில் பக்தர்கள் கூட்டம் நிரம்புவதால் இலவச பொது தரிசனம் வழி காலியாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நாளொன்றுக்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வரும் நிலையில், 50 ரூபாய் கட்டண தரிசன வழியை மட்டுமே கோயில் நிர்வாகம் கவனம் செலுத்துவதாக கூறப்படுகிறது. இதனால் இக்கட்டண வழியில் சென்றால் விரைவில் தரிசனம் செய்துவிடலாம் என பக்தர்களும் செல்வதால், அம்மணி அம்மன் கோபுரத்திற்கு வெளியேவும், ராஜகோபுரத்திற்கு வெளியேயும் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.