கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நடந்த எறிபத்த நாயனார் பூக்குடலை விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மகா அஷ்டமியை முன்னிட்டு நடந்த இந்நிகழ்வில எறிபத்த நாயனார், புகழ் சோழ நாயனார், சிவகாமி ஆண்டார் சிறப்பு அலங்காரத்தில் நகர்வலம் வந்தனர். அப்போது மதம்பிடித்த யானை பூப்பறித்து கொண்டு வந்த சிவகாமி ஆண்டாளை தள்ளி விடுவது போன்றும், அந்த யானையை சிவபக்தர்கள் துரத்தி செல்வது போன்றும் பின்னர் எறிபத்த நாயனார் யானையின் தும்பிக்கை வெட்டி சாய்ப்பது போன்று தத்ரூபமாக நடத்தி காண்பிக்கப்பட்டது.