திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே காரணி கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் மக்கள் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டது. ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், தரைப்பாலம் நீரில் மூழ்கிய நிலையில், தடுப்புகளை அமைத்து போலீசார் போக்குவரத்தை தடை செய்தனர். இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட மக்கள் அனைவரும் அவதியடைந்தனர். இந்நிலையில், புதுப்பாளையம் - காரணி இடையே 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மேம்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.