திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே மீனவ கிராமங்கள் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், கோரை குப்பம் மீனவ கிராம மக்கள், பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். கோரை குப்பம் மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்த போது, குணம் குப்பம் மற்றும் வைரவன் குப்பம் மீனவர்கள் அத்து மீறியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள கோரை குப்பம் மீனவர்கள், தங்களது வாழ்வாதாரத்தை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க கோரி, பேரணியாக சென்று கோட்டாட்சியர் கனிமொழியிடம் மனு அளித்தனர்.