ஓணம் பண்டிகையையொட்டி மீன்களுக்கு உரிய விலை இல்லாததால் கடலுக்கு செல்ல போவதில்லை என தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி தொழிலாளர்கள் அறிவித்தனர்.தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் ஏலம் எடுப்பதற்காக கேரள வியாபாரிகள் வருவார்கள்.ஓணம் பண்டிகையையொட்டி கேரள வியாபாரிகள் 5 நாட்கள் வரை மீன் வாங்க வருவதில்லை என்பதால் மீன்களுக்கு உரிய விலை இருக்காது.இதனால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதால் இன்றும், நாளையும் கடலுக்கு செல்ல போவதில்லை என மீனவர்கள் அறிவித்துள்ளனர்.இதனால் கரையில் 265 விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன.