தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள நிலையில், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீண்டும் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த கேரள விசைப்படகை பறிமுதல் செய்த மீன்வளத்துறை அதிகாரிகள், அதில் இருந்த 17 மீனவர்களை விசாரணைக்கு பின் எச்சரித்து அனுப்பி வைத்தனர். மீன்வளத்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 42 கடல் மைல் தொலைவில் கேரள விசைப்படகு ஒன்று அத்துமீறி நுழைந்து மீன்பிடித்துக் கொண்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த படகையும், அதிலிருந்த மீனவர்களையும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.