திருப்பூரில் சாய ஆலை சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீயை, தீயணைப்பு வீரர்கள் 3 வாகனங்கள் மூலம் 5 மணி நேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். குளத்துப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள மன்னரை பொது சாய சுத்திகரிப்பு நிலையத்தில் ஊழியர்கள் பணியில் இருந்தபோது, ரியாக்டர் இயந்திரத்தில் திடீரென தீப்பற்றிய நிலையில், அங்கு பயன்படுத்தாத குழாய்களில் இருந்து வெளியேறிய வாயு மற்றும் ரசாயனங்களால் தீ கொளுந்து விட்டு எரிந்தது.