செங்கல்பட்டு மாவட்டம் நத்தம் பகுதியில் பழுது பார்க்கப்பட்ட சரக்கு வாகனம் சோதனை ஓட்டத்தின்போது தீ பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வாகனத்தின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்த நிலையில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.