திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அடுத்த வில்பட்டியில் பேன்சி கடையில் லேப்டாப் சார்ஜர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில், கடையில் இருந்த மாற்றுத்திறனாளி படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜெயவீரன் என்ற மாற்றுத்திறனாளி லேப்டாப் வைத்து வேலை பார்த்து கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.