திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பஞ்சு அரவை ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. மங்கலம் அக்ரஹாரபுதூர் பகுதியில் பஷீர் அராபத் என்பவர் பஞ்சு அரவை ஆலை நடத்தி வருகிறார். வழக்கமான வேலைகள் நடைபெற்று வந்த நிலையில், தீடீரென தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இயந்திரத்தில் ஏற்பட்ட தீ அருகில் இருந்த பஞ்சில் பற்றி எரிய தொடங்கியது. தீ விபத்தில் 40 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.