புதுக்கோட்டை பால்பண்ணை அருகே கோழி இறைச்சி கடையில் சிலிண்டர் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் கடை முழுவதும் எரிந்து நாசமானது.வெங்கடாசலம் என்பவருக்கு சொந்தமான கோழி கடையில், கேஸ் அடுப்பை சுத்தம் செய்த போது சிலிண்டர் டியூப் வழியாக வாயு கசிந்து விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்ததோடு, சிலிண்டரை குளத்திற்கு எடுத்து சென்று கேசை வெளியேற்றினர்.