வக்பு வாரிய திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற மனிதநேய ஜனநாயக கட்சியினருக்கும், அவர்களை தடுத்து நிறுத்திய போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆம்பூரில் ரயில் நிலையத்தில் திரண்ட மனிதநேய ஜனநாயக கட்சியினர், வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நகலை கிழித்து எரிந்தும், சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார், மத்திய அமைச்சர் சிராஜ் பஸ்வான் புகைப்படங்களை காலணியால் அடித்தும், மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் நிலையத்தில் அத்துமீறி நுழைய முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.