கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தேரிக்கொட்டாய் கிராமம் அருகே மலை மீது அமைந்துள்ள காட்டு முனியப்பன் கோயில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் முதல் நாளில் பக்தர்கள் மேளதாளங்கள் முழங்க பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அபிஷேகம் செய்தனர். திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.