திருப்பத்தூர் மாவட்டம் விஷமங்கலம் பகுதியில் குழந்தைகளுக்காக நுங்கு பறிக்க பனைமரத்தில் ஏறிய தந்தை, தவறி கீழே விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விஷமங்கலத்தை சேர்ந்த சசிகுமாருக்கு திருமணமாகி ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், குழந்தைகள் தந்தையிடம் நுங்கு வேண்டும் என கேட்டுள்ளனர். வீட்டின் அருகே உள்ள பனைமரத்தில் நுங்கு பறிக்க ஏறியவர், திடீரென கால் தவறி தலைக்குப்புற கீழே விழுந்துள்ளார். படுகாயமடைந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவரை பரிசோதித்த மருத்துவர்கள், முதலுதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.