தஞ்சையில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் விவசாயிகள் கடன் விடுதலை மாநாட்டை ஒட்டி விவசாயிகள் பேரணியாகச் சென்றனர். தஞ்சை தபால் நிலையத்திலிருந்து விவசாயிகள் குதிரையில் அமர்ந்தும், பொய்க்கால் குதிரை, கரகாட்டம் உள்ளிட்டவற்றுடன் மேளதாளத்துடன் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்றனர். இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்று கையில் கொடியேந்தி பேரணியாக மாநாட்டு பந்தலை சென்றடைந்தனர்.