மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மீண்டும் இறால் பண்ணை அமைக்கப்படுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வெள்ளப்பள்ளம் கிராமத்தில் செயல்பட்டு வந்த இறால் பண்ணை பத்து ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் போராட்டம் காரணமாக மூடப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. பண்ணை அமைந்தால் நிலத்தடி நீர் மட்டம் குறைவைதோடு உப்புநீராக மாறும் என்றும் நிலங்களும் உலர் நிலங்களாக மாறும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.