சென்னையை கலக்கிய பிரபல ரவுடி காது குத்து ரவியை போலீஸார் கைது செய்தனர். அக்கரை பகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் ஜாமீனில் வெளியில் வந்த ரவி, நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்த நிலையில், அவரை பிடிக்க நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.