வேலூர் மாவட்டத்தில் பிரபல உணவக உரிமையாளர் வீட்டில் நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்தது. தொண்டான்துளசி பகுதியில் உள்ள உணவக உரிமையாளர் மேத்தா கிரி என்பவரது வீட்டில், 5 பேர் கொண்ட அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். 9 மணி நேர சோதனைக்கு பிறகு அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.