கோவையில் ஐடி ஊழியருக்காக பீகாரில் இருந்து வாங்கி வரப்பட்ட கள்ளத் துப்பாக்கி மற்றும் 6 குண்டுகளை பறிமுதல் செய்த தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார், ஐடி ஊழியர் உள்ளிட்ட மூவரை பிடித்து பீளமேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மூவர் மீதும் ஆயுத தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கோவை சேரன் மாநகர் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் மணிகண்ட பிரபு, தினமும் வேலைக்கு செல்லும் வாகன ஓட்டுநரான ஹரிஷ் ஸ்ரீ, பீகாரில் குறைந்த விலையில் நாட்டு துப்பாக்கி கிடைக்கும் என கூறியதை நம்பி தனக்கும் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். இதையடுத்து தனது நண்பரான பீகாரை சேர்ந்த குந்தன்ராஜவை அழைத்துக் கொண்டு ஹரிஷ் ஸ்ரீ ரயிலில் பீகார் சென்று துப்பாக்கியை வாங்கி வந்துள்ளார்.