அதிமுக-பாஜக கூட்டணியை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதறுகிறார் என்றும், அவருக்கு தேர்தல் ஜூரம் வந்து விட்டதாகவும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்தார். சென்னை தியாகராயநகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்காக அதிமுக மிரட்டப்படவில்லை என்றும், மகிழ்ச்சியோடு தான் தாங்கள் கூட்டணி அமைத்துள்ளதாகவும் கூறினார்.