சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே துணி துவைக்கும்போது மின்சாரம் தாக்கிய தங்கையை காப்பாற்ற முயன்ற அக்கா உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கட்டுக்குடிபட்டி அரசு பள்ளியில் படித்து வந்த கல்லங்காலப்பட்டியை சேர்ந்த திவ்யாவும், அவரது தங்கை சிவரஞ்சனியும் தோட்டத்துக்கு கிணற்றில் துணி துவைத்து குளிப்பதற்காக சென்றனர். அப்போது, சிவரஞ்சனியை மின்சாரம் தாக்கியதைக் கண்டு திவ்யா காப்பாற்ற முயன்றார்.