சென்னை வண்ணாரப்பேட்டையில் 24 மணி நேர அவசரகால மகப்பேறு மருத்துவமனையில் திடீர் மின்சார தடை ஏற்பட்டதால், சிகிச்சைக்கு வந்த நிறைமாத கர்ப்பிணிகள் அவதி அடைந்தனர். சோலையப்பன் தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான இந்த மருத்துவமனையில் தினந்தோறும் ஏராளமான கர்ப்பிணிகள் மருத்துவ பரிசோதனைக்காகவும், பிரசவத்திற்காவும் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், மருத்துவமனையில் திடீரென மின்சார தடை ஏற்பட்டதால், கர்ப்பிணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.