திண்டுக்கலில் வீட்டிற்கு விளையாட வந்த 7 வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய மூதாட்டி கைது செய்யப்பட்டார். புதுப்பட்டியைச் சேர்ந்த சிறுமி பிரித்திகா, விளையாடுவதற்காக பக்கத்து வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்த நிலையில், அந்த வீட்டில் இருந்த மூதாட்டி குருவம்மாள், வீட்டிற்கு வரக் கூடாது என கூறி இரும்பு கம்மியால் தாக்கியுள்ளார்.