திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே 8 ஆண்டுகளுக்கு பின் நடைபெறவுள்ள திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பிடிமண் எடுக்கும் நிகழ்வில் வேடம் அணிந்து மாட்டு வண்டிகளில் ஏராளமானோர் ஊர்வலமாக சென்றனர். சக்கிலியான்கொடை பகுதியில் உள்ள மதுரை வீரன் வேட்டைக்காரன், காளியம்மன், பகவதி அம்மன் உள்ளிட்ட கோயில்கள் உள்ளன. 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கோயில்களில் திருவிழா நடைபெறவுள்ள நிலையில், சுவாமி சிலைகள், குதிரை உள்ளிட்ட சிலைகள் செய்ய பிடிமண் எடுத்து செல்லும் நிகழ்வு நடைபெற்றது.