நாகை அருகே தேவூர் கடுவையாற்றில் புதிதாக கட்டப்பட்ட பாலத்தின் கீழ் தடுப்பணை கட்டாத காரணத்தால் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். தேவூர் கடுவையாற்றில் 100 ஆண்டுகளுக்கு முன்பு தடுப்பணையுடன் கட்டப்பட்டிருந்த பாலம் முழுவதுமாக இடிக்கப்பட்டு கட்டப்பட்ட போது தற்போது தடுப்பணை கட்டப்படவில்லை. இதனால் ஆற்று நீர் தேங்காமல், முழுவதுமாக கடலுக்கு வீணாக செல்லுவதால் நிலத்தடி நீர் வற்றும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்தனர்.