பெரம்பலூர் அருகே குடிபோதையில் மனைவி மற்றும் மகளை கத்தியால் கணவன் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொண்டமாந்துறை பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றபோது, தட்டி கேட்ட அவரது மனைவி மாரியம்மாவை கத்தியால் குத்திய நிலையில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் தடுக்கச் சென்ற மகளையும் முதுகில் குத்தியதில் பலத்த காயமடைந்த அவர், பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.