கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கலங்கலான குடிநீர் வருவதாக பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர். நகராட்சி மூலம் பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் கடந்த 5 நாட்களாக கலங்கலாக வருவதாகவும், அதனை குடிப்பதன் மூலம் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் மக்கள் புகார் கூறினர்.