விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த ஆப்பிரம்பட்டு கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கடந்த 28-ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி விமரிசையாக நடைபெற்று வந்த நிலையில் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நடைபெற்றது.