யார் யார் எதைக் கற்றுக் கொள்கிறார்களோ, அதை கற்றுக் கொள்ளட்டும், கட்டாயப்படுத்தாதீர்கள் என நடிகர் வடிவேலு கையெடுத்து கும்பிட்டு வேண்டுகோள் விடுத்தார். சென்னை யானைகவுனியில் நடைபெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தமிழ் மொழிக்கு ஆபத்து வந்திருப்பதாக கூறினார். மேலும், பூனையை பிடித்து குயில் போல கத்தச் சொன்னால் எப்படி கத்தும் என கேள்வி எழுப்பினார்.