பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில், மாணவ- மாணவிகள் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். தமிழர்களின் கலாச்சார ஆடையான வேட்டி- சட்டை, சேலை அணிந்து வந்த மாணவ- மாணவிகள், பொங்கல் வைத்தும், கிராமிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகளை நடத்தியும் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.